அக். 4ம் தேதி ரயில் மறியல் போராட்டம் : விவசாய அமைப்புகள் அறிவிப்பு


காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன. காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.
அப்போது, காவிரியில் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அக்டோபர் 30ம் தேதி வரை நாளொன்றுக்கு 2 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக் கோரி, வரும் 4ம் தேதி தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.    
By
 புதிய தலைமுறை   September 25, 2012 9:01 am 

No comments:

Post a Comment